×

7 பெண்கள் பலி சென்னை லாரி டிரைவர் கைது

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டையை சேர்ந்த 48 பேர் கர்நாடகாவுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு 2 வேன்களில் நேற்று முன்தினம் அதிகாலை ஊருக்கு திரும்பினர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சுற்றுலா வேன் ஒன்று பஞ்சராகி நின்றது. இதனால் 15 பெண்கள் கீழே இறங்கி, தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்தனர். அப்போது, பின்னால் பெங்களூருவில் இருந்து சென்னை வந்த மினிலாரி மோதியதில் 7 பெண்கள் இறந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். இதில் லாரி டிரைவரும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய சென்னை கொளத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் அருணாசலத்தை (34) கைது செய்தனர்.

The post 7 பெண்கள் பலி சென்னை லாரி டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirupattur ,Onanguttai ,Peranampatu ,Vellore district ,Karnataka ,
× RELATED நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம்...